×

பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4.8 கோடியை வெள்ளியன்று பறிமுதல் செய்தது பறக்கும் படை. பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பிடிபட்ட பணத்தை விடுவிக்கும்படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

The post பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : BJP ,IAS ,Bengaluru ,Sudhakar ,Chikkaballapur ,Karnataka ,Munish Mutkalai ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!